என் மலர்tooltip icon
    • புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.
    • 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    முற்றிலும் வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள்:

    உயிர்காக்கும் மருந்துகளுக்கு 12% ஆக இருந்த வரி பூஜ்யமாக குறைகிறது. பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி நீக்கப்பட்டது.

    மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் நீக்கப்பட்டது.

    தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

    வரி குறைக்கப்பட்ட பொருட்கள்:

    வீட்டு உபயோகப் பொருட்கள், சாமானிய மக்களுக்கான பொருட்கள் அனைத்தும் 5 சதவீத வரி அடுக்குக்குள் கொண்டுவரப்படுள்ளது.

    ஹேர் ஆயில், ஷாம்பு, பற்பசை மற்றும் பல் ஃப்ளாஸ் போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் நொறுக்குதீனிகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    மருத்துவத்துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    வரி உயர்த்தப்பட்ட பொருட்கள்:

    சிகரெட், பான்மசாலா, கார்பனேற்ற குளிர்பானங்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    • துரோகம் தலைவிரித்து ஆடுவதாக கூறியுள்ள டிடிவி தினகரன் குற்றச்சாட்டு.
    • கூட்டணி குறித்த நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில் திடீர் முடிவு.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

    துரோகம் தலைவிரித்து ஆடுவதாக கூறியுள்ள டிடிவி தினகரன், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகுவதாக தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, என்டிஏ கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகியதை தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

    கூட்டணி குறித்த நிலைப்பாடு டிசம்பரில் அறிவிக்கப்படும் என்று கூறிய நிலையில் திடீர் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

    • எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.
    • கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பேன்.

    செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் நடைபெற்ற காஞ்சிபுரம் தே.மு.தி.க. கழக மாவட்ட செயலாளர் இராஜேந்திரன் இல்ல மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மணமக்களை வாழ்த்தினார்.

    இதன்பின் செய்தியாளளை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், "உள்ளம் தேடி இல்ல நாடி" என்ற முதல் சுற்றுப்பயணம் வெற்றிகரமாகவும் மக்களுடைய ஆதரவோடும் மிக சிறப்பாக நடைபெற்றது. மீண்டும் 2-ம் கட்ட பயணம் நாளை (இன்று) தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் மிகச் சிறப்பான வரவேற்பு அளித்தார்கள்.

    நான் பலமுறை எங்கள் கட்சி கூட்டணி குறித்து கூறிவிட்டேன். கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணியை பற்றி அறிவிப்பேன். நான் சொல்லாதது செய்தியாக வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என நான் சொல்லாததை அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளன. நான் அப்படி பேசவே இல்லை. இவை அனைத்தும் முற்றிலும் தவறான செய்தி. அது தவறான விஷயம். அந்த வார்த்தை என் வாயில் வரவே வராது.

    எங்கள் கட்சி நிர்வாகிக்குள் பேசுவதை, நீங்கள் நான் பேசியதாக போடுவது மிகவும் கண்டனத்துக்குரியது. தே.மு.தி.க. சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறேன். நான் சொல்லாததை சொல்வதாக நீங்கள் செய்தி வெளியிட்டால் இனி பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டேன் என்றார்.

    முன்னதாக, தே.மு.தி.க.வுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக கூறி எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டார் என்று பிரேமலதா கூறியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழ்நாடு- இங்கிலாந்து கூட்டாண்மையை ஆழப்படுத்த இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின்வெஸ்ட்-ஐ சந்தித்தேன்.
    • பொருளாதாரத்தை உருவாக்க இங்கிலாந்தின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அழைத்தேன்.

    சென்னை :

    இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இங்கிலாந்து அமைச்சரை சந்தித்தது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-



    லண்டனில், தமிழ்நாடு- இங்கிலாந்து கூட்டாண்மையை ஆழப்படுத்த இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின்வெஸ்ட்-ஐ சந்தித்தேன்.

    பசுமைப்பொருளாதாரம், கல்வி, ஆராய்சி, திறன் மேம்பாடு மற்றும் கடல்சார் இணைப்பு ஆகியவற்றில் உள்ள வாய்ப்புகளைப் பற்றி நாங்கள் விவாதித்தோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மின்சார வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொருள் உற்பத்தி ஆகியவற்றில் தமிழ்நாடு வலுவாக உள்ளதை நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். மேலும் நிலையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் பொருளாதாரத்தை உருவாக்க இங்கிலாந்தின் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் அழைத்தேன் என்று கூறியுள்ளார்.

    • ரஷியாவில் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்திய பொருட்கள் மீது டிரம்ப் 50% வரிவிதித்தார்
    • பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

    8 ஆண்டுகளுக்கு பிறகு ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்ய டிரம்பின் 50% வரிவிதிப்பு தான் காரணம் என்று என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

    இந்நிலையில், இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், " அமெரிக்காவின் 50% வரி விதிப்புக்கும் ஜிஎஸ்டி சீர்திருத்த முடிவுக்கும் தொடர்பு இல்லை. இது குறித்து கடந்த 18 மாதங்களாக நாங்கள் ஆலோசித்து வந்தோம்" என்று தெரிவித்தார்.

    • சிவப்பு நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
    • வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இந்த அத்தனை நிகழ்வுகளையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.

    சென்னை:

    பூமியின் நிழலானது சந்திரனின் மேல் விழும் நிகழ்வைத்தான் சந்திர கிரகணம் என்று அழைக்கிறோம். அதாவது, சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போதுதான் இந்த நிகழ்வு சாத்தியம் ஆகிறது. இந்த சந்திர கிரகணம், ஒரு முழு நிலவு நாளில் அதாவது, பவுர்ணமி தினத்தன்று மட்டுமே நிகழும்.

    அதன்படி, வருகிற 7-ந் தேதி இந்த நிகழ்வு நடக்கிறது. அன்றையதினம் இரவு 9.57 மணிக்கு பூமியின் நிழலால் சந்திரன் மறைய தொடங்கும். இரவு 11.01 மணி முதல் நள்ளிரவு 12.23 மணி வரை அதாவது, 82 நிமிடங்கள் நீடிக்கும். பின்னர் அதிகாலை 1.27 மணியில் இருந்து சந்திரன் பூமியின் நிழலை விட்டு வெளியேறிவிடும். சந்திரன் முழு கிரகணம் அடையும்போது, வானத்தில் அது மறைந்துவிடாது. மாறாக அந்த நேரத்தில் அடர் சிவப்பு நிறத்தில் மிக அழகாக தோன்றும்.

    அவ்வாறு சிவப்பு நிறமாக தோன்றுவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அதாவது, சூரியனிடம் இருந்து வரும் ஒளி கதிர்களான சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், கருநீலம் மற்றும் ஊதா ஆகிய 7 வண்ணங்களில் சிவப்பு நிறம் ஒளி சிதறல் குறைவாகவும், அதே நேரத்தில் அதனுடைய அலை நீளம் அதிகமாகவும் இருக்கும். இது பூமியின் வளிமண்டலத்தின் மீது மோதும்போது ஒளிவிலகல் அடைகிறது. இதன் காரணமாகவே சந்திரன் சிவப்பு நிறமாக மாறுகிறது.

    அந்த வகையில் 7-ந் தேதி இரவு 9.57 மணிக்கு பகுதி கிரகணம் தொடங்குகிறது. முழு கிரகணம் 11.01 மணிக்கு ஆரம்பிக்கிறது. முழு கிரகணத்தை நள்ளிரவு 11.42 மணிக்கு பார்க்க முடியும். அதன் பின்னர், 12.23 மணிக்கு முழு கிரகணமும், அதிகாலை 1.27 மணிக்கு பகுதி கிரகணமும் முடிந்து, அதிகாலை 2.25 மணிக்கு புறநிழல் பகுதியைவிட்டு வெளியேறும். வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் இந்த அத்தனை நிகழ்வுகளையும் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.

    இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது முற்றிலும் பாதுகாப்பானது என்றும், இதை பார்ப்பதால் எந்த தீங்கும் ஏற்படாது என்றும், இந்த இயற்கையான, அழகான, அற்புதமான நிகழ்வை கண்டு ரசிக்கலாம் என்றும் அறிவியல் பலகை மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஸ்ரீகுமார் தெரிவித்தார்.

    • GST சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது
    • கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி விகிதங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறோம்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    பல முக்கிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பல பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வரவேற்றுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஜிஎஸ்டி சீர்திருத்தம் மற்றும் பொருட்கள் மீதான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. சீர்திருத்தம் செய்வதற்கு 8 ஆண்டுகள் என்பது மிகவும் தாமதமானது

    தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்று வரை நடைமுறையில் உள்ள விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கவே கூடாது.

    கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகக் குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் வேண்டுகோள்கள் உங்கள் காதுகளுக்கு கேட்கவே இல்லை.

    இப்போது ஜி.எஸ்.டி. வரியில் மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசை தூண்டியது எது?

    மந்தமான பொருளாதார வளர்ச்சியா? வீட்டுக் கடன் அதிகரிப்பா? வீட்டு சேமிப்பு குறைவதா? பீகாரின் தேர்தலா? டிரம்பின் வரி விதிப்பா? அல்லது இவை அனைத்துமா?

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    பிரபலமானவர்களின் சந்திப்பால் பிரச்சனைகள் அகலும். குடும்பத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரிப்பது நல்லது.

    ரிஷபம்

    விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நாள். அரசு வழிச்சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக பணியாளர்களால் பிரச்சனைகள் உண்டு.

    மிதுனம்

    தட்டுப்பாடுகள் அகல கட்டுப்பாடோடு செயல்பட வேண்டிய நாள். தன்னிச்சையாக எதையும் செய்ய இயலாது. மனக்குழப்பம் அதிகரிக்கும். வீண் விரயங்கள் உண்டு.

    கடகம்

    நல்ல வாய்ப்புகள் நாடி வரும் நாள். தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணைபுரியும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    சிம்மம்

    சச்சரவுகளை சாமர்த்தியமாகப்பேசி சமாளிக்கும் நாள். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ளும் எண்ணம் உருவாகும். மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும்.

    கன்னி

    எடுத்த காரியத்தில் இனிதே வெற்றி காணும் நாள். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிட்டும். தொழில் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    துலாம்

    பணியில் ஏற்பட்ட பாதிப்புகள் அகலும் நாள். பணவரவு திருப்தி தரும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் உண்டு. தொழில் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

    விருச்சிகம்

    தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். எதிர்கால நலன் கருதி முக்கிய புள்ளிகளை சந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பயணங்களால் பலன் உண்டு.

    தனுசு

    கொடுத்த பணம் குறித்தபடி வந்து சேரும் நாள். குடும்பச்சுமை கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அலைபேசி வழித்தகவல் ஆச்சரியப்படுத்தும்.

    மகரம்

    இடம், பூமி வாங்க எடுத்த முயற்சி கைகூடும் நாள். சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். விலை உயர்ந்த பொருட்களைக் கையாளுவதில் கவனம் தேவை.

    கும்பம்

    சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். பெற்றோர் வழியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். உடன்பிறப்புகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.

    மீனம்

    தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சகோதர வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.

    • 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டது
    • 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அமலுக்கு வருகிறது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, 12, 28 ஆகிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கப்பட்டு 5, 18 ஆகிய 2 அடுக்குகளை மட்டுமே கொண்ட புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குமுறை செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது.

    அதே போல் சில பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    அவ்வகையில் பான் மசாலா, புகையிலைப் பொருட்கள் மற்றும் கார்பனேற்ற குளிர்பானங்களுக்கு 28 சதவீதமாக இருந்த வரி, 40% ஆக உயர்த்தப்பட்டு சிறப்பு வரி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

    மேலும், 1,500 சிசி திறனுக்கு மேல் உள்ள சொகுசு பைக்குகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களுக்கு 40% வரி விதிக்கபட்டுள்ளது. 

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு ஆவணி-19 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : துவாதசி பின்னிரவு 3 மணி வரை பிறகு திரயோதசி

    நட்சத்திரம் : உத்திராடம் இரவு 11.24 மணி வரை பிறகு திருவோணம்

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், இன்று சுபமுகூர்த்த தினம்

    இன்று சுபமுகூர்த்த தினம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். மதுரை ஸ்ரீ சோமசுந்தரர் விறகு விற்றருளிய காட்சி. விருதுநகர் ஸ்ரீ சொக்கநாதர் தெப்ப உற்சவம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரதவல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம்.

    ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமான் வழிபாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-களிப்பு

    ரிஷபம்-மாற்றம்

    மிதுனம்-நன்மை

    கடகம்-உற்சாகம்

    சிம்மம்-சாந்தம்

    கன்னி-புகழ்

    துலாம்- சாதனை

    விருச்சிகம்-பயணம்

    தனுசு- நற்செயல்

    மகரம்-நிம்மதி

    கும்பம்-பாராட்டு

    மீனம்-நட்பு

    ×